ADDED : ஜூன் 13, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஜூன் 15 அன்று ரேஷன் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ஜூன் 15 அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ரேஷன் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெறும்.
இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு கோருதல், அலைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உட்பட ரேஷன் கடைகளின் குறைகள் குறித்து புகார் அளிக்கலாம், என்றார்.