ADDED : செப் 13, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை (செப்., 14) சிறப்பு ரேஷன் குறைதீர்முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இம்முகாம் நடைபெறும். இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, அலைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார்களை தெரிவிக்கலாம்.