/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேர்தல் விதி மீறல் 20 வழக்கு பதிவு
/
தேர்தல் விதி மீறல் 20 வழக்கு பதிவு
ADDED : ஏப் 16, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு எம்.எல்.ஏ., தொகுதிக்கும் 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்புக் குழு, 4 வீடியோ மதிப்பீட்டுக்குழு, ஒரு வீடியோ பார்வையிடும் குழு என 36 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் விதிமுறைகளை மீறி பிளக்ஸ் வைத்தது, கூடுதல் வாகனங்களில் பிரசாரம், சாலையை மறித்து பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறை மீறல் செய்ததாக அரசியல் கட்சிகள் மீது இதுவரை 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

