sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சாலையோர கருவேல மரங்கள் அகற்றம்

/

சாலையோர கருவேல மரங்கள் அகற்றம்

சாலையோர கருவேல மரங்கள் அகற்றம்

சாலையோர கருவேல மரங்கள் அகற்றம்


ADDED : செப் 11, 2024 12:13 AM

Google News

ADDED : செப் 11, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : திருப்புவனம், - பூவந்தி சாலையில் சாலையோர கருவேல மரங்களை தினமலர் செய்தி எதிரொலியாக வெட்டி அகற்றப்பட்டன. திருப்புவனத்தில் இருந்து பூவந்தி வழியாக மேலூர், சிவகங்கைக்கு தினசரி ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.

சிவகங்கை, தொண்டி, காளையார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அருப்புக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்பவர்கள் பூவந்தி வழியாக திருப்புவனம் வந்து செல்கின்றனர்.

தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இப்பாதையில் கலுங்குப்பட்டி கிராமத்தை ஒட்டி சாலையை ஆக்ரமித்து கருவேல மரங்கள் வளர்ந்து மறைத்து வருகின்றன. இரவு நேரங்களில் ரோட்டில் கருவேல மரங்கள் இருப்பது தெரியாமல் பலரும் அதில் சிக்கி காயமடைகின்றனர்.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us