ADDED : செப் 11, 2024 12:13 AM
திருப்புவனம் : திருப்புவனம், - பூவந்தி சாலையில் சாலையோர கருவேல மரங்களை தினமலர் செய்தி எதிரொலியாக வெட்டி அகற்றப்பட்டன. திருப்புவனத்தில் இருந்து பூவந்தி வழியாக மேலூர், சிவகங்கைக்கு தினசரி ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.
சிவகங்கை, தொண்டி, காளையார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அருப்புக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்பவர்கள் பூவந்தி வழியாக திருப்புவனம் வந்து செல்கின்றனர்.
தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இப்பாதையில் கலுங்குப்பட்டி கிராமத்தை ஒட்டி சாலையை ஆக்ரமித்து கருவேல மரங்கள் வளர்ந்து மறைத்து வருகின்றன. இரவு நேரங்களில் ரோட்டில் கருவேல மரங்கள் இருப்பது தெரியாமல் பலரும் அதில் சிக்கி காயமடைகின்றனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.