sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரூ. 20 கோடியில் மழைநீர் கால்வாய் கட்டும் பணி

/

ரூ. 20 கோடியில் மழைநீர் கால்வாய் கட்டும் பணி

ரூ. 20 கோடியில் மழைநீர் கால்வாய் கட்டும் பணி

ரூ. 20 கோடியில் மழைநீர் கால்வாய் கட்டும் பணி


ADDED : ஆக 24, 2024 03:52 AM

Google News

ADDED : ஆக 24, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் ( அ.தி.மு.க) தலைமையில் நடந்தது . துணைத் தலைவர் ரமேஷ் ( அ.தி.மு.க. ) முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதம்


வடிவேல் முருகன் (அ.தி.மு.க.,): மயானத்தில் எரிக்க சித்தானுார் ஊராட்சியில் ரூ. 500 வசூலிக்கின்றனர். மூட்டம் போடக்கூடாது என நிபந்தனை விதிக்கின்றனர். நகராட்சிக்கென ஒரு மயானம் உடனடியாக தேவை. நவீன மின் மயானத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

தலைவர்: நவீன மின் மயானம் செயல்பாட்டுக்கு கொண்டு வர கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பிணத்தை எரித்து பரிசோதனை செய்ய உள்ளோம். புதிதாக வேறு மயானம் அமைக்கவும் பரிசீலிப்போம்.

ரமேஷ் (து.த.): சுகாதார பிரிவின் செயல்பாட்டில் திருப்தி இல்லை. ஆங்காங்கே குப்பை குவியலாக உள்ளது. காலி இடங்களில் புதர் மண்டி தண்ணீர் தேங்கி நிற்கிறது. வாரச்சந்தையில் மழை பெய்தால் தண்ணீரில் நடக்க முடியவில்லை.

வேலுச்சாமி ( காங்.): 2 வது வார்டில் கால்வாயே இல்லை. வள்ளியப்பன் செட்டியார் ஊருணி அருகே உள்ள கால்வாய் நீர் ஊருணியில் கலக்கிறது.

அனிதா (காங்): இறகுசேரி ஊருணியில் ஏப்ரல் மாதம் முதல் கழிவுநீர் கலந்து மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

நிரோஷா (அ.தி.மு.க.,): 16வது தொகுதி நகராட்சி பள்ளியில் மரங்கள் கட்டடத்தை சேதப்படுத்தி விபத்து ஏற்படும் ஆபத்தான நிலையில் உள்ளது. துாய்மை பணியாளர்களை வேலை செய்ய கூறினால் உபகரணங்கள் இல்லை என்கின்றனர்.

சுதா (காங்): கிருஷ்ணராஜ புரத்தில் ரோடு சேதமடைந்து மோசமாக உள்ளது. மழை பெய்தால் இரவு 12:00 மணிக்கு போனில் அழைத்து மக்கள் திட்டுகின்றனர். எம்.எல்.ஏ. , எம்.பி., நிதியில் கூட கேட்டு விட்டேன். பலனில்லை. பொது நிதியில் ரோடு போட்டு தர வேண்டும்.

தலைவர்: நகரில் 95 சதவிகிதம் ரோடு போட்டதால் மீதி 5 சதவிகிதம் ரோடுகளை போட கேட்கிறார்கள். அரசு கேட்டு கொண்டதை தொடர்ந்து ரூ. 20 கோடிக்கு கால்வாய் பணிக்கு மதிப்பீடு அனுப்பி உள்ளோம். அனுமதி வந்தவுடன் விரைவில் பணிகள் துவங்கும். அலுவலர்கள் இல்லாததால் பணிகளுக்கான டெண்டர் விடவில்லை. விரைவில் டெண்டர் விடப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us