sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி விடுவிப்பு; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்

/

நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி விடுவிப்பு; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்

நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி விடுவிப்பு; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்

நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி விடுவிப்பு; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்


ADDED : ஜூலை 19, 2024 06:18 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 'நமக்கு நாமே' திட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.100 கோடி விடுவித்துள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: 'நமக்கு நாமே' திட்டம் மூலம் பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பிடம், ஆய்வகம், சைக்கிள் ஸ்டாண்ட், பள்ளி சுற்றுச்சுவர், அரசு மாணவர் விடுதி கட்டடம், விளையாட்டு மைதானம், சாலை, குடிநீர் வசதி, சமுதாயக்கூடம், பூங்கா, பள்ளி கட்டடம் புனரமைத்தல் போன்று ஏராளமான பணிகளை செய்ய தனி நபர், குழுக்கள், பதிவு செய்த சங்கம், அறக்கட்டளை, பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்கள் பங்களிப்பு தொகை வரவேற்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற பங்களிப்பு தொகையை கலெக்டர், சிவகங்கை என்ற பெயரில் காசோலை, வரைவோலை எடுத்து கலெக்டர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரிடம் வழங்க வேண்டும். நமக்கு நாமே திட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு பொதுமக்கள் பங்களிப்பு வழங்கி உதவ வேண்டும்.






      Dinamalar
      Follow us