ADDED : ஜூன் 27, 2024 11:45 PM

சிவகங்கை : அரசின் கனவு இல்லம்,ஊரக வீடுகள் பராமரிப்பு திட்டத்திற்கு கூடுதல் அலுவலரை நியமித்தல் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஸ்கரன் தலைமை வகித்தார்.ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சிவகங்கையில் பாண்டிச்செல்வி, தேவகோட்டையில் ஜாகீர் உசேன், காளையார்கோவிலில் ஷகிலா, கல்லலில் செல்வராஜ், திருப்புவனத்தில் காசிவிஸ்வநாதன், கண்ணங்குடியில் முருகேசன், மானாமதுரையில் செந்தில்நாதன், இளையான்குடியில் பிரபாகரன், சிங்கம்புணரியில் சேக் அப்துல்லா, திருப்புத்துாரில் சிவா தலைமை வகித்தனர். சங்க மாவட்ட தலைவர் வேலுச்சாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பெரியசாமி, மாவட்ட துணை தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

