ADDED : மே 06, 2024 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை அருகே வைகை ஆற்று பகுதிகளில் தலைச்சுமை, டூவிலர்களிலும் ஆற்று மணல் கடத்தப்பட்டு வருவதால் கனிமவளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மானாமதுரை பகுதியில் ஓடும் வைகை ஆற்றுப்பகுதிகளில் பூக்குளம், வேதியரேந்தல், ஆதனூர் கல்குறிச்சி கீழப்பசலை, ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் சாக்கு மூடைகளில் மணலை நிரப்பி தலைச்சுமையாகவும், டூவீலர்களிலும் கடத்தி வருவதால் கனிம வளம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.