sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பள்ளி மாணவர்கள் சென்றவேன் விபத்தில் சிக்கியது

/

பள்ளி மாணவர்கள் சென்றவேன் விபத்தில் சிக்கியது

பள்ளி மாணவர்கள் சென்றவேன் விபத்தில் சிக்கியது

பள்ளி மாணவர்கள் சென்றவேன் விபத்தில் சிக்கியது


ADDED : ஆக 01, 2024 04:43 AM

Google News

ADDED : ஆக 01, 2024 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் மாணவர்கள் தப்பினர்.

சிவகங்கை அருகே பனங்காடி ரோட்டில் உள்ளது கேந்திர வித்யாலயா பள்ளி. நேற்று பள்ளிக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டு காலை 11:30க்கு மாணவர்கள் வீட்டிற்கு செல்ல துவங்கினர். இந்த பள்ளியில் காளையார்கோவில் பகுதியில் இருந்து படிக்கும் மாணவர்கள் தனியார் வாகனம் மூலம் வந்து செல்கின்றனர். மாணவர்கள் 17 பேர் நேற்று காலை 11:40 மணிக்கு பள்ளியில் இருந்து தனியார் வேன் மூலம் காளையார்கோவில் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றனர்.

வேனை புளியடிதம்பம் அருகே உள்ள திட்டகோட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு 39 இயக்கினார். வேன் சிவகங்கை அருகே பி.குளத்துப்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது ஓட்டுனர் திருநாவுக்கரசின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வேனில் இருந்த மாணவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மாணவர்களை டாக்டர்கள் பரிசோதித்ததில் இரண்டு மாணவர்களுக்கு மட்டும் சிறு காயம் ஏற்பட்டது தெரியவந்தது. மாணவர்கள் அனைவரும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us