sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வீடுகளில் நுாலகம் அமைத்த பள்ளி மாணவர்கள்

/

வீடுகளில் நுாலகம் அமைத்த பள்ளி மாணவர்கள்

வீடுகளில் நுாலகம் அமைத்த பள்ளி மாணவர்கள்

வீடுகளில் நுாலகம் அமைத்த பள்ளி மாணவர்கள்


ADDED : மார் 07, 2025 08:03 AM

Google News

ADDED : மார் 07, 2025 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர்: திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வீடு நுாலகம்' பராமரிக்கும் மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடந்தது.

இப்பள்ளியில் பயிலும் 45 மாணவர்கள் தங்கள் வீடுகளில் நூலகம் அமைத்துள்ளனர். ஒவ்வொருவரும் 25 புத்தகங்கள் முதல் 306 புத்தகங்கள் வரை மொத்தம் 2800 புத்தகங்களை இந்த நூலகங்களில் வைத்துள்ளனர். குடும்பத்தினர், நண்பர்கள் படிக்க இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாணவர்களைப் பள்ளிக்கு வந்து சிவகங்கை மாவட்ட நூலகர் திருஞானம், மாவட்ட நூலக புத்தக சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி, மாவட்ட நூலக எழுத்தர் ஈஸ்வரன், நூலகர் மகாலிங்க ஜெயகாந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வீட்டு நூலகம்' பராமரிப்பதற்கு உற்சாகப்படுத்தி வாழ்த்தினர்.

சிவகங்கையில் நடந்த புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கலெக்டர் அறிவித்த தமிழக அரசின் வீட்டு நூலகம்' விருதுக்காக இந்த 45 மாணவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. பள்ளித் தலைவர் விக்டர் மாவட்ட நூலகர் குழுவினருக்குப் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். தாளாளர் ரூபன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us