sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோடையில் எள் பயிரிடலாம்: இணை இயக்குனர் தகவல்

/

கோடையில் எள் பயிரிடலாம்: இணை இயக்குனர் தகவல்

கோடையில் எள் பயிரிடலாம்: இணை இயக்குனர் தகவல்

கோடையில் எள் பயிரிடலாம்: இணை இயக்குனர் தகவல்


ADDED : ஏப் 29, 2024 11:52 PM

Google News

ADDED : ஏப் 29, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கோடையில் மழை குறைவாக இருப்பதால், குறைந்த செலவில் 50 எக்டேரில் எள் பயிரிடும் திட்டம் உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: குறைந்த நீரில் சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்டலாம். 85 நாட்கள் பயிர் தான். ஏக்கருக்கு 2 கிலோ விதை போதும். எள் அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வளரும். டி.எம்.வி., 3, 4, 7 ஆகிய ரகங்கள் உள்ளது. சித்திரையில் இரு முறை கோடை உழவு செய்து, மண்ணை நன்கு கலைத்து விட வேண்டும்.

விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த உயிர் பூஞ்சான் கொல்லி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் விதையுடன் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். சலித்த மணலை விதையின் அளவுக்கு சம அளவு கலந்து சீராக நிலத்தில் துாவ வேண்டும். 15 ம் நாள் 15 செ.மீட்டர் இடைவெளி வைத்து செடியை கலைத்துவிட வேண்டும்.

விதைத்த 30 வது நாள் 30 செ. மீ., இடைவெளி வைத்து மீண்டும் ஒரு முறை செடியை கலைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அதிக கிளைகள் வெடித்து அதிக எள் காய்கள் பிடிக்கும்.

மின்னணு பண பரிவர்த்தனை

மாவட்டத்தில் 12 வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகள் பணம் செலுத்தி இடு பொருள் பெறுவதற்கு பதில், மின்னனு பண பரிவர்த்தனை மூலம் இடு பொருள் பெறலாம். இதற்காக ஒவ்வொரு மையத்திலும் கையடக்க மின்னணு இயந்திரம் உள்ளது. சிவகங்கையில் ஆய்வு செய்த வேளாண் துணை இயக்குனர் சங்கரசுப்பிரமணியன், இங்கு மின்னணு பண பரிவர்த்தனை இயந்திரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us