sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2838 வழக்குகளுக்கு தீர்வு 

/

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2838 வழக்குகளுக்கு தீர்வு 

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2838 வழக்குகளுக்கு தீர்வு 

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2838 வழக்குகளுக்கு தீர்வு 


ADDED : செப் 15, 2024 12:09 AM

Google News

ADDED : செப் 15, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 2838 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.5.95 கோடி வரை பயனாளிகளுக்கு கிடைத்தது.

சிவகங்கை மாவட்டத்தில் 13 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ நடராஜன், குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, சார்பு நீதிபதி சாண்டில்யன், ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி சுப்பையா, குற்றவில் நீதித்துறை நடுவர் 1 நீதிபதி அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் 2 நீதிபதி செல்வம், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஆப்ரின் பேகம் வழக்குகளை விசாரித்தனர்.

196 குற்றவியல் வழக்குகளும், 236 காசோலை மோசடி வழக்குகளும், 265 வங்கிக் கடன் வழக்குகளும், 196 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 118 குடும்பப் பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 640 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 201 மற்ற குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 1853 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1116 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.5 கோடியே 16 லட்சத்து 36 ஆயிரத்து 334 வரை வழக்காடிகளுக்கு கிடைத்தது.

வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 985 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 91 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.78 லட்சத்து 79 ஆயித்து 200 வரையில் வங்கிகளுக்கு வரவானது.

ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us