ADDED : மார் 04, 2025 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொது குறைதீர் கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்ட உதவி தொகை, ஊனமுற்றோர் உதவி தொகை, ரேஷன் கார்டு கோரிக்கை என 286 மனுக்கள் வரை பெறப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி, உதவி கமிஷனர் (கலால்) ரங்கநாதன், சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் உட்பட அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.