sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோடை வெயில் புழுக்கத்தால் தவிக்கும் மாணவ, மாணவிகள்

/

கோடை வெயில் புழுக்கத்தால் தவிக்கும் மாணவ, மாணவிகள்

கோடை வெயில் புழுக்கத்தால் தவிக்கும் மாணவ, மாணவிகள்

கோடை வெயில் புழுக்கத்தால் தவிக்கும் மாணவ, மாணவிகள்


ADDED : பிப் 24, 2025 04:09 AM

Google News

ADDED : பிப் 24, 2025 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மின்விசிறி இருந்தும் இயங்காததால் மாணவ, மாணவியர்கள் புழுக்கத்தால் தவித்து வருகின்றனர்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கீழடி, பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏராளமாக இயங்கி வருகின்றன.

ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் இருக்கும், இதனாலேயே மார்ச் மாதத்திலேயே பொதுத்தேர்வுகள் தொடங்க ஆரம்பித்து விடும். இந்தாண்டு பருவ நிலை மாற்றம் காரணமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

மழையில்லாத நிலையில் பிப்.,ல் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போதிய அளவு காற்றோட்டம் இருப்பதில்லை. பள்ளி வகுப்பறைகளில் மின் விசிறி வசதி இருந்தாலும் சரிவர இயங்குவதில்லை. அரசு பள்ளிகளுக்கு பல இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதால் அருகில் உள்ள மரங்கள் முழுவதும் வெட்டப்பட்டு விட்டன.

இதனால் புழுக்கத்தில் மாணவ, மாணவியர்கள் தவித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் மின்கட்டணம் காரணமாக மின் விசிறிகளை இயக்காததால் மாணவ, மாணவியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கோடை கால நோய்களான வியர்க்குறு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய் தொற்றுகளும் தலை காட்ட தொடங்கியுள்ளன. கிராமப்புற பள்ளிகளில் குடிநீர் வசதியும் சரிவர இருப்பதில்லை.






      Dinamalar
      Follow us