/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாலியல் வழக்கில் டெய்லருக்கு 20 ஆண்டு சிறை
/
பாலியல் வழக்கில் டெய்லருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஆக 10, 2024 02:36 AM

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் வாய் பேசமுடியாத சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், டெய்லருக்கு 20 ஆண்டு சிறை, ரூ.5000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன் தீர்ப்பளித்தார்.
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் டெய்லர் கண்ணன் 54. 2017ல் இவரது கடைக்கு வந்த வாய்பேச முடியாத 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
சிறுமியின் பெற்றோர் சிவகங்கை மகளிர்ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
கண்ணனுக்கு 20 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இழப்பீடாக ரூ.8 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.