ADDED : ஜூன் 24, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்,ஜூன் 25-
திருப்புத்துார் தம்பிபட்டி வரசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஜூன் 21 மாலை யாகசாலையில் சுவாமியிடம் அனுமதி,வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூர்வாங்க பூஜை நடந்தது. மறுநாள் காலை கணபதிேஹாமம்,லெட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம் சிவாச்சார்யார்களால் நடந்தது. இரவு 8:00 மணிக்கு முதற்காலயாக பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.
நேற்று முன்தினம் காலை இரண்டாம் காலயாக பூஜை, இரவில் மூன்றாம் கால யாகபூஜை நடந்தன. நேற்று காலை 9:15 மணிக்கு நான்காம்கால யாக பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.தொடர்ந்து யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி விமானத்தில் காலை 10:07 மணிக்கு புனிதநீரால் கும்பாபிேஷகம் நடந்தது.
