/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா
/
தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா
ADDED : ஜூலை 14, 2024 05:49 AM

திருப்புத்துார், : திருப்புத்துார் தென்மாப்பட்டு ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவில் கிராமத்தினர் பங்கேற்றனர்.
ஜூன் 21ல் கிராமத்தினர் கிராம சவுக்கையில் ஒன்று கூடினர். தொடர்ந்து வேளாருக்கு புரவி அமைக்க பிடி மண் வழங்கப்பட்டது.
ஜூலை 5 மாலை ஆதினமிளகி அய்யனார் கோயில் முன்பாக உள்ள சேங்கை ஊருணியில் வெட்டுதல் நடந்தது.
நேற்று முன்தினம் கிராமத்தினர் ஒன்று கூடி சின்னையா கோயிலிலிருந்து சாமி அழைத்து ஊர்வலமாக புதுப்பட்டி சென்றனர்.
நேற்று மாலை 6:00 மணிக்கு சாமி அழைப்புடன் புரவி பொட்டலில் கூடினர். பின்னர் புரவிகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து புரவிகளை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
இன்று காலை சாமி அழைத்து மஞ்சுவிரட்டுடன் புரவி எடுப்பு விழா நிறைவடைகிறது.