sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷக விழா; யாகசாலை பூஜையுடன் துவக்கம்

/

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷக விழா; யாகசாலை பூஜையுடன் துவக்கம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷக விழா; யாகசாலை பூஜையுடன் துவக்கம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷக விழா; யாகசாலை பூஜையுடன் துவக்கம்


ADDED : ஆக 20, 2024 07:24 AM

Google News

ADDED : ஆக 20, 2024 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி : இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம், கோ பூஜை அதனைத் தொடர்ந்து மாலை யாகசாலை பூஜைகள் துவங்கியது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்து மாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் தொடர்ந்து 10நாட்கள் பொங்கல் விழா நடைபெறும்.இந்த விழா நாட்களின் போது தமிழகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்து வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த சில வருடங்களாக பணிகள் நடைபெற்று வந்து முடிவுற்றதை தொடர்ந்து வருகிற ஆக. 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கோயில் முன்பாக யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை கோயில் வளாகத்தில் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் ஆரம்பமாகின.

இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றது பின்னர் கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு வகையான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

மாலை 6:45 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து 3 நாள்கள் 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிற 22ம் தேதி காலை 8:00மணியிலிருந்து 9:15 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், விழா கமிட்டியினர், கோயில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us