sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புத்துார் அரசு மருத்துவமனைக்கு பஸ்சுடன் சிகிச்சைக்கு வந்த டிரைவர்

/

திருப்புத்துார் அரசு மருத்துவமனைக்கு பஸ்சுடன் சிகிச்சைக்கு வந்த டிரைவர்

திருப்புத்துார் அரசு மருத்துவமனைக்கு பஸ்சுடன் சிகிச்சைக்கு வந்த டிரைவர்

திருப்புத்துார் அரசு மருத்துவமனைக்கு பஸ்சுடன் சிகிச்சைக்கு வந்த டிரைவர்


ADDED : மார் 04, 2025 03:56 AM

Google News

ADDED : மார் 04, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : அரசு பஸ்சை ஓட்டிய டிரைவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அரசு மருத்துவமனைக்கு பஸ்சுடன் சிகிச்சைக்கு வந்தார்.

தஞ்சாவூர் கபிஸ்தலத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் சிவக்குமார் 43. இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பஸ் டிரைவராக உள்ளார். நேற்று காலை இவர் தஞ்சாவூர் அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து மதுரைக்கு செல்ல அரசு பஸ்சை ஓட்டி வந்தார். திருப்புத்துாரில் காலை 11:30 மணிக்கு மதுரைக்கு புறப்பட்ட போது திடீரென சிவக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. வழியில் இருந்த திருப்புத்துார் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அரசு பஸ்சை நிறுத்தினார். தொடர்ந்து கண்டக்டர் மற்றும் பயணிகள் உதவியுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பஸ்சில் வந்த பயணிகள் மாற்று பஸ்சில் மதுரைக்கு அனுப்பப்பட்டனர்.






      Dinamalar
      Follow us