sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

எதிர்க்கட்சியாக இருந்தால் கோஷம் தான் எந்த திட்டமும் வராது: பா.ஜ., வேட்பாளர்

/

எதிர்க்கட்சியாக இருந்தால் கோஷம் தான் எந்த திட்டமும் வராது: பா.ஜ., வேட்பாளர்

எதிர்க்கட்சியாக இருந்தால் கோஷம் தான் எந்த திட்டமும் வராது: பா.ஜ., வேட்பாளர்

எதிர்க்கட்சியாக இருந்தால் கோஷம் தான் எந்த திட்டமும் வராது: பா.ஜ., வேட்பாளர்


ADDED : ஏப் 04, 2024 04:06 AM

Google News

ADDED : ஏப் 04, 2024 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை, : எதிர்க்கட்சியாக இருக்கும்போது எம்.பி.,யாக இருந்ததால் தொகுதிக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. அவையில் கோஷம் தான் போட முடியும் என கார்த்தி கூறுகிறார்.

இந்த முறையும் கார்த்திக்கை ஆதரித்தால் இத்தொகுதிக்கு வசதிகள் எப்படி வரும் என பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் கேள்வி எழுப்பினார்.

மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட், தேவர் சிலை, கன்னார்தெரு, அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட பா.ஜ., கூட்டணி சிவகங்கை வேட்பாளர் தேவநாதன் பேசியதாவது: இத்தொகுதியில் 7 முறை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிதம்பரம் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றவில்லை.

தமிழகத்திலேயே மிகவும் பின் தங்கிய பகுதியாக சிவகங்கை உள்ளது. தொழிற்சாலை இல்லாத காரணத்தினால் இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலை உள்ளது.

இத்தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது எம்.பி.,யாக இருந்ததால் தொகுதிக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவையில் கோஷம் தான் போட முடியும் என கார்த்தி கூறுகிறார். இந்த முறையும் கார்த்திக்கை ஆதரித்தால் இத்தொகுதிக்கு வசதிகள் எப்படி வரும்.

இந்த முறையும் காங்., எதிர்க்கட்சியாகத்தான் வரும். பிரதமராக மோடி 3வது முறையாக பதவியேற்பார் என்றார்.

பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன், துணைத் தலைவர்கள் சுரேஷ் சுகனேஸ்வரி மானாமதுரை நகர தலைவர் நமகோடி, ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், இளையான்குடி ஒன்றிய தலைவர் ராஜ பிரதீப் நிர்வாகிகள் சங்கரசுப்பிரமணியன், முருகானந்தம் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us