sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கீழடி அட்டையடி கண்மாய் துார்வாரும் பணி தொடக்கம்

/

கீழடி அட்டையடி கண்மாய் துார்வாரும் பணி தொடக்கம்

கீழடி அட்டையடி கண்மாய் துார்வாரும் பணி தொடக்கம்

கீழடி அட்டையடி கண்மாய் துார்வாரும் பணி தொடக்கம்


ADDED : ஜூன் 24, 2024 11:55 PM

Google News

ADDED : ஜூன் 24, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி : கீழடி அட்டையடி கண்மாயை தனியார் பங்களிப்புடன் துார் வாரும் பணி நேற்று தொடங்கியது.

கீழடியின் கிழக்குப்பகுதியில் அட்டையடி கண்மாய் உள்ளது. 22 ஏக்கர் பரப்பளவுள்ள இக்கண்மாய் மழையை நம்பியே உள்ளது. கண்மாயை சுற்றிலும் வாழை, நெல், தென்னை விவசாயம் நடைபெறுகிறது. நான்கு வழிச்சாலைக்காக அட்டையடி கண்மாயை இரண்டாக பிரிக்கிறது.

கடந்த சில வருடங்களாக கண்மாயில் தண்ணீர்தேங்காததால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டது.

கீழடி ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன் முயற்சியால் மதுரை மேற்கு ரோட்டரிசங்கத்தின் வைர விழாவை முன்னிட்டு 15 லட்ச ரூபாய் செலவில் அட்டையடி கண்மாயை தூர் வார முடிவு செய்யப்பட்டு நேற்று அதற்கான விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன் தலைமை வகித்தார்.

கீழடி வி.ஏ,ஓ., பிரபு, ரோட்டரி சங்க தலைவர் தனராஜன், செயலாளர் சுமதி ஞானகுகன், இயக்குனர்கள் மைதிலி, பொன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கண்மாயை துார் வாரும் போது உதிரியாக கிடைக்கும் மண்ணை வைத்து கீழடி அருங்காட்சியகத்தில்பள்ளமும் மேடுமாக உள்ள வாகனங்கள் நிறுத்துமிடம் சரி செய்யப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us