sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மும்முனை மின்சாரம் கட் ; குடிநீர் விநியோகம் பாதிப்பு

/

மும்முனை மின்சாரம் கட் ; குடிநீர் விநியோகம் பாதிப்பு

மும்முனை மின்சாரம் கட் ; குடிநீர் விநியோகம் பாதிப்பு

மும்முனை மின்சாரம் கட் ; குடிநீர் விநியோகம் பாதிப்பு


ADDED : மே 01, 2024 07:51 AM

Google News

ADDED : மே 01, 2024 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே மும்முனை மின்சாரம் வழங்காததால் ஊராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது.

இவ்வொன்றியத்தில் மருதிப்பட்டி ஊராட்சியில் சில நாட்களாக இரவு நேரத்தில் மும்முனை மின்சாரம் முழுவதும் வழங்கப்படுவதில்லை. இதனால் விவசாய மின் மோட்டார்கள், ஊராட்சி நிர்வாகத்தின் குடிநீர் தொட்டிகளுக்கு நீரேற்றும் மோட்டார் செயல்படுவதில்லை.

இதனால் காலையில் ஊராட்சிகள் மூலம் வீடுகளுக்கும், பொதுக் குழாய்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பகல் நேரத்தில் ஏற்றப்படும் தண்ணீர் குறைந்த அளவு வீடுகளுக்கே செல்கிறது.

கோடை வெயில் வாட்டியெடுக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் ஒரு வாரமாக தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அவதியில் உள்ளனர்.

மேலும் மும்முனை மின்சாரத்தை நம்பி கோடை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மும்முனை மின்சாரத்தை நிறுத்தாமல் வழங்க விவசாயிகளும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us