ADDED : ஜூலை 19, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் விழிப்புணர்வு கூட்டம் தலைமையாசிரியர் சேவியர்ராஜ் தலைமையில் நடந்தது.
ஆசிரியர் அன்பரசன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர்கள் கணேசமூர்த்தி,வைரமணி, எஸ்.எஸ்.ஐ. கலா விளக்கமளித்தனர். என்.எஸ்.எஸ். மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இல்ல இயக்குநர் விக்டர் டிசோசா, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஜெயசீலன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.