sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருக்கோஷ்டியூரில் உத்ஸவம் நிறைவு

/

திருக்கோஷ்டியூரில் உத்ஸவம் நிறைவு

திருக்கோஷ்டியூரில் உத்ஸவம் நிறைவு

திருக்கோஷ்டியூரில் உத்ஸவம் நிறைவு


ADDED : செப் 17, 2024 05:18 AM

Google News

ADDED : செப் 17, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோஷ்டியூர்,: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் திருபவித்ர உத்ஸவம் நிறைவடைந்தது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் திருபவித்ர உத்ஸவம் மூன்று நாட்கள் நடைபெறும். ஆண்டு தோறும் கோயிலில் நடந்த தோஷங்கள் நிவர்த்திக்காக வைகானஸ ஆகம முறைப்படி, தென்னாச்சார்ய சம்பிரதாயப்படி பட்டாச்சார்யார்கள் இந்த உத்ஸவத்தை நடத்துகின்றனர்.

செப்.14 ல் ஏகாதசியன்று உத்ஸவ துவக்கத்தன்று காலையில் பெரிய பெருமாள் சன்னதியில் மூலவருக்கு 108 கலசாபிேஷகம் நடந்தது.

மாலையில் யாகசாலையில் யாகபூஜை நடந்து பெருமாளுக்கு ரக்சா பந்தனம் நடந்தது. தொடர்ந்து பவித்ரமாலை பிரதிஷ்டை நடந்தது.

இரண்டாம் நாளில் கோயிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் பவித்ரமாலை சாத்தப்பட்டது. தொடர்ந்து மகாசாந்தி ேஹாமம் நடந்தது.நேற்று காலை 11:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் வீதி உலா நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் மூலவர் சன்னதி புறப்பாடு ஆகியது.

தொடர்ந்து மூலவருக்கு மகா சம்ப்ரோசனம் நடந்தது. உத்வஸ நாட்களில் பட்டாச்சார்யார்களால் திருவாய்மொழி பாசுரம் பாடப்பட்டு சாற்று முறை நடந்தது.






      Dinamalar
      Follow us