sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குடிநீரின்றி தவிக்கும் வேம்பனி மக்கள்

/

குடிநீரின்றி தவிக்கும் வேம்பனி மக்கள்

குடிநீரின்றி தவிக்கும் வேம்பனி மக்கள்

குடிநீரின்றி தவிக்கும் வேம்பனி மக்கள்


ADDED : மார் 25, 2024 07:20 AM

Google News

ADDED : மார் 25, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : காளையார்கோவில் ஒன்றியம், வேம்பனி கிராமத்தில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் சப்ளை இன்றி, குடிநீருக்காக மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த ஒன்றியத்தில் பள்ளித்தம்பம் ஊராட்சியின் கீழ் வேம்பனி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 120 வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். திருச்சி - ராமநாதபுரம் காவிரி கூட்டுகுடிநீர் திட்ட குழாய் சென்றபோது, வேம்பனி கிராம மக்களுக்கு பொது குழாயில் குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். தற்போது மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக பள்ளித்தம்பம் ஆர்ச்சில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியால் வேம்பனி கிராமத்திற்கு செல்லும் காவிரி குடிநீர் தடை பட்டது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் கிடைக்காமல் ஒரு குடம் குடிநீர் ரூ.20 முதல் 30 வரை கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வேம்பனி கிராம மக்கள் கலெக்டர் ஆஷா அஜித்திடம் பல முறை புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோடை காலம் துவங்கியதால், குடிநீர் தட்டுப்பாட்டில் வேம்பனி கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

பள்ளிதம்பம் ஊராட்சி தலைவர் சண்முக பிரியா கூறியதாவது: வேம்பனி கிராமத்தில் மக்களின் குடிநீர் தேவைக்காக ஒரே இடத்தில் 5 குழாய்கள் பொருத்தியுள்ளோம். கடந்த 8 மாதமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் புதிய குழாய் பொருத்துவதற்கான பணியால், குடிநீர் வினியோகம் இன்றி வேம்பனி மக்கள் தவிக்கின்றனர். இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்துவிட்டோம்.






      Dinamalar
      Follow us