sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பூத் சிலிப் வழங்காததால் வாக்காளர்கள் அலைக்கழிப்பு

/

பூத் சிலிப் வழங்காததால் வாக்காளர்கள் அலைக்கழிப்பு

பூத் சிலிப் வழங்காததால் வாக்காளர்கள் அலைக்கழிப்பு

பூத் சிலிப் வழங்காததால் வாக்காளர்கள் அலைக்கழிப்பு


ADDED : ஏப் 20, 2024 05:24 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் உள்ள மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் முறையாக பூத் சிலிப் வழங்காததால் ஓட்டு சாவடி தெரியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் 37 பூத்கள் உள்ளன. நகராட்சியில் 17,951 ஆண் வாக்காளர்கள்.18,887 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் வரிசை எண், பாகம் எண், எந்த பூத் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பூத் சிலிப் வழங்கப்பட்டது.

இவற்றை நகராட்சி பணியாளர்கள் மூலம் வீடுதோறும் வழங்கப்பட்டது. இதில் ஒரு சில நகராட்சி பணியாளர்கள் முறையாக வழங்கவில்லை. பணியாளர்கள் வழங்காத பூத் சிலிப்பை சம்பந்தப்பட்ட பூத்தில் நேற்று வெளியே வைத்துக்கொண்டு அங்கு சிலிப் இல்லாமல் வருபவர்களிடம் கேட்டு விசாரித்து வழங்கினர். இதனால் ஒரு சிலர் ஓட்டளிக்கவே வரவில்லை.

சிவகங்கை நகராட்சியில் வார்டு வரையறைக்கு பிறகு ஒரே குடும்பத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஒரு பூத்திலும் தாய்க்கு மற்றொரு பூத்திலும் ஓட்டு மாறியுள்ளது.

இவ்வாறு மாறி இருப்பவர்கள் பூத் சிலிப் இல்லாததால் தங்களது ஓட்டு எந்த பூத்தில் உள்ளது என்பது தெரியாமல் ஓட்டளிப்பதற்கு மிகவும் சிரமம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us