ADDED : மார் 05, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் துறை சார்பில் 19 ஆம் நுாற்றாண்டின் ஆங்கில இலக்கியம் என்ற தலைப்பில் பன்னாட்டு இணையதள கருத்தரங்கம் நடந்தது. ஆங்கிலத் துறை தலைவர் பொன்.மதன் வரவேற்றார்.
இங்கிலாந்து காண்டர்பெரி கிரைஸ்ட் சர்ஜ் பல்கலை பேராசிரியை கரோலின் ஆல்டன் பேசினார்.
கருத்தரங்கில் உறுப்புக் கல்லுாரி பேராசிரியர்கள் கவிதா, ராஜன் கணபதி, சோமசுந்தரம், ஜெபராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் செனட் உறுப்பினர் நடராஜன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பேராசிரியை கனிமொழி நன்றி கூறினார்.