sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துரிதமாக நடக்குமா

/

காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துரிதமாக நடக்குமா

காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துரிதமாக நடக்குமா

காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துரிதமாக நடக்குமா

1


ADDED : ஆக 12, 2024 03:48 AM

Google News

ADDED : ஆக 12, 2024 03:48 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி, : காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில், நடந்து வரும் புதிய கட்டிட கட்டுமானப் பணிகளை விரைந்து நடத்த வேண்டுமென பயணிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

காரைக்குடி நகராட்சி ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழைய பஸ் ஸ்டாண்ட் 1987 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிருந்து சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் செல்கிறது. மேலும் புதுவயல், கல்லல், தேவகோட்டை உள்ளிட்ட சுற்று பகுதிகளுக்கு 30க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் செல்கின்றன. தவிர புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை உள்ளிட்டபல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றன.

தினமும் அதிக பயணிகள் வந்து செல்லும் பழைய பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாததோடு கட்டிடம் முற்றிலுமாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து, புதிய கட்டிடப் பணிக்கு என ரூ.3.95 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் கடந்த டிச., மாதம் தொடங்கியது.

மாநகராட்சி அந்தஸ்து பெற்றுள்ள காரைக்குடி, பழைய பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தி பிற மாவட்டங்களில் உள்ளது போல் பெரிய பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், கட்டுமான பணியால் பயணிகள் நிற்பதற்கு போதிய இடவசதி இல்லாததால், மழை மற்றும் வெயிலில் நின்றபடி பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். பணியை துரிதமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.






      Dinamalar
      Follow us