sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காலாவதியான அரசு குடியிருப்பு சட்டசபையில் அறிவிப்பு வருமா

/

காலாவதியான அரசு குடியிருப்பு சட்டசபையில் அறிவிப்பு வருமா

காலாவதியான அரசு குடியிருப்பு சட்டசபையில் அறிவிப்பு வருமா

காலாவதியான அரசு குடியிருப்பு சட்டசபையில் அறிவிப்பு வருமா


ADDED : மார் 13, 2025 04:55 AM

Google News

ADDED : மார் 13, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் அரசு ஊழியர், ஆசிரியர்கள்குடியிருக்க வசதியுடன் கூடிய குடியிருப்பு கட்டித்தர சட்டசபை மானிய கோரிக்கையில் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ராமநாதபுரத்தில் இருந்து சிவகங்கையை தலைமையிடமாக கொண்டு 1984ம் ஆண்டு புதிய மாவட்டம் உருவானது. அக்கால கட்டடத்தில் பணிபுரிந்த அரசுஊழியர்கள் குடியிருக்க முதற் கட்டமாக சிவகங்கை 48 காலனியில் 48 வீடுகள் அடங்கிய குடியிருப்பு கட்டினர்.

அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகவளாகம் மருதுபாண்டியர் நகர், காரைக்குடியில் கழனிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 856 வீடுகள் வரை கட்டி கொடுக்கப்பட்டது. அந்தந்த துறை அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது சம்பளத்தின் அடிப்படையில் வீடுகளை பெற்று குடியிருந்து வந்தனர்.

வீடுகள் கட்டி 40 ஆண்டு கடந்த நிலையில், உரிய பராமரிப்பின்றிவீடுகள் சிதிலமடைந்து வந்தன. இதனால் அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் குடியிருக்க முடியாமல் அச்சத்துடன், வீடுகளை காலி செய்து நகருக்குள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

பெரும்பாலான அலுவலர், ஊழியர்கள் இங்கு குடியிருக்கவே மனமின்றி மதுரையில் இருந்துதினமும் சிவகங்கைகலெக்டர், காரைக்குடி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு வந்து செல்கின்றனர். சிதிலமடைந்து வந்ததால் ஊழியர்கள் குடியிருக்காத வீடுகளை அகற்றுமாறு அரசு உத்தரவிட்டதை அடுத்து, மருதுபாண்டியர் நகரில் உள்ள வீடுகளில் முதற்கட்டமாக 312 வீடுகள் வரை அகற்றியுள்ளனர். எஞ்சிய வீடுகள் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.

புதிய குடியிருப்புவீடுகள் வருமா


இங்கு பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு உரிய வசதியுடன் குடியிருப்புகள்கட்டிக்கொடுத்தால் அனைத்து ஊழியர்களும் இங்கு தங்கி பணிபுரிய வாய்ப்பு ஏற்படும். இதற்கு சட்டசபை மானியக்கோரிக்கையில் அரசுஅறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

நவீன வசதியுடன்வீடுகள் தேவை


தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரி கூறியதாவது: சிதிலமடைந்த குடியிருப்புகளை அகற்றி, புதிதாக குடியிருப்புகட்டித்தர நிதி ஒதுக்குமாறு கலெக்டர் மூலம் அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளனர்.

இந்த வளாகத்தை சுற்றியே ரூ.89 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட உள்ளது.

இதனால் இங்கு கார் பார்க்கிங், 'லிப்ட்', தடையில்லா காவிரி குடிநீர், தார் ரோடு, பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் புதிய குடியிருப்புகள் கட்டினால், அரசு ஊழியர்கள் தடையின்றி சிவகங்கையில் தங்கி பணிபுரிய வாய்ப்பாக அமையும், என்றார்.






      Dinamalar
      Follow us