sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காளையார்கோவில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் அமையுமா

/

காளையார்கோவில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் அமையுமா

காளையார்கோவில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் அமையுமா

காளையார்கோவில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் அமையுமா


ADDED : மே 08, 2024 05:44 AM

Google News

ADDED : மே 08, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காளையார்கோவிலில் அரசு மருத்துவமனை மதுரை - தொண்டி தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு தினசரி 100க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். 24 மணி நேரமும் மருத்துவர்கள் தங்கி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தபட்டதில் இருந்து இங்கு மகப்பேறு, பொதுமருத்துவம் 24 மணி நேரமும் பார்க்கப்படுகிறது. புறநோயாளிகள் பிரிவு, எக்ஸ்ரே அறை, பல் மருத்துவ பிரிவு உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில் பிரதே பரிசோதனை கூடம் மற்றும் பிணவறை அமைக்கப்படாமல் இருப்பது குறையாக உள்ளது.

காளையார்கோவிலை சுற்றியுள்ள பகுதியில் யாராவது விபத்தில் இறந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டாலோ அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டிய சூழல் உள்ளது.

இதனால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.






      Dinamalar
      Follow us