நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் காளையார்கோவில் சகாயராணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் இணைந்து உலக முதலுதவி தினம் கொண்டாடினர்.
செவிலியர் மனோ சித்ரா வரவேற்றார். மருத்துவமனை நிறுவனர் சேகர் தலைமை வகித்தார். டாக்டர் முஸ்தபா, தலைமை ஆசிரியர் விக்டர் ஜேம்ஸ் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி முதலுதவி தினம் குறித்து பேசினார். ஆசிரியர் பாண்டி நன்றி கூறினார்.