/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 05, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தானியங்கி முறையை நடைமுறைப்படுத்தும் செயலை கைவிட்டு மீண்டும் கால் சென்டர் தொழிலாளர்கள் மூலம் அவசர அழைப்புகளுக்கு உரிய 108 ஆம்புலன்ஸ் செல்லும் விதத்தில் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.