ADDED : ஜூலை 24, 2025 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : பெரும்பச்சேரி வேல்முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.
பூஜையை முன்னிட்டு அதிகாலை வள்ளி,தெய்வானையுடனான வேல்முருகனுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக,ஆராதனை நடந்தது.கோயில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெரும்பச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.