sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 16 ஆயிரம் கோடி பயிர்கடன் இலக்கு

/

 16 ஆயிரம் கோடி பயிர்கடன் இலக்கு

 16 ஆயிரம் கோடி பயிர்கடன் இலக்கு

 16 ஆயிரம் கோடி பயிர்கடன் இலக்கு


ADDED : நவ 20, 2025 04:05 AM

Google News

ADDED : நவ 20, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: நடப்பாண்டில் 16 ஆயிரம் கோடி பயிர்கடன் வழங்கப்படும்' என்று திருப்புத்துாரில் நடந்த 72வது அனைத்து இந்திய கூட்டுறவு வாரவிழாவில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

பயனாளிகளுக்கு கடனுதவி, கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி அவர் பேசிய தாவது: தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் தேர்தல் நடத்தி கூட்டுறவுத்துறையில் பல தில்லு முல்லு' நடந்தன. அவற்றை சரி செய்து கூட்டுறவுத்துறையை மீட்டுள்ளோம். கிராம, நகர பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவுத்துறை பெரும் பங்கு வகிக்கிறது. நாட்டில் 70 சதவீதம் பேர் விவசாயம் செய்கின்றனர். இன்று வரை விவசாயத் தொழில் தொடர கூட்டுறவுத்துறை உதவியாக உள்ளது. உழவு, விதைக்கு நிதியுதவி, உரம், இடுபொருள் வழங்கல் என்று கூட்டுறவு சங்கங்கள் உதவுகின்றன.

அது போல சிறுதொழில், விவசாயம், மகளிர் என்று 17 வகையான கடனுதவிகளும் வழங்கப்படுகின்றன. பயிர்கடனைப் பொறுத்தவரை அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி பயிர்க்கடனே வழங்கப்பட்டது.

ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே 10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது.இந்த ஆண்டு 16 ஆயிரம் கோடி பயிர்க்கடன் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அதை கூட்டுறவுத்துறை நிறைவேற்றும் இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us