/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
2.07 லட்சம் மாடுகளுக்கு காணை தடுப்பூசி
/
2.07 லட்சம் மாடுகளுக்கு காணை தடுப்பூசி
ADDED : ஜூலை 03, 2025 03:14 AM
சிவகங்கை, ஜூலை 3-மாவட்ட அளவில் 55 கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் 2.07 லட்சம் மாட்டினங்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
காளையார்கோவில் அருகே பருத்திக்கண்மாயில் தடுப்பூசி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது: தேசிய கால்நடை நோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் 7 வது சுற்றுக்குரிய கால் மற்றும் வாய் காணை நோய்க்கான தடுப்பூசி ஜூலை 31 வரை செலுத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட 55 மருத்துவ குழுவினரில், குழுவிற்கு 150 கால்நடைகள் வீதம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 600 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். கால்நடை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) கிரிஜா, உதவி இயக்குனர்கள் ஞானசுப்பிரமணியன், ஜெயப்பிரகாஷ் பங்கேற்றனர். ///