/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயிலில் 25 கிலோ புகையிலை பறிமுதல்
/
ரயிலில் 25 கிலோ புகையிலை பறிமுதல்
ADDED : மார் 17, 2025 07:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில், ரயிலில் கிடந்த 25 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில், நின்று கொண்டிருந்த புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில், எஸ்.ஐ., சவுதமா மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலை, குட்கா கிடந்தன. அதனை கைப்பற்றிய போலீசார் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.