ADDED : செப் 23, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பூட்டிய வீட்டை திறந்து 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த சரவணன் பிரியாணி கடை மாஸ்டர்.
நேற்று சரவணன் கடைக்குச் சென்றதும், மனைவி சுமதி காலை 11:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தோப்புக்கு சென்றார். மதியம் 12:30 மணிக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. சரவணன் அளித்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.