ADDED : செப் 26, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி கே.எம்.சி., காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 20. இவர் நேற்று முன்தினம் உதயம் நகர் பகுதியில் சென்ற போது, 5 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.
காரைக்குடி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய காரைக்குடி ரஸ்தா பகுதியைச் சேர்ந்த மகாராஜா 21 மற்றும் 3 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிறுவன் ஒருவர் வளர்த்த ரூ. ஒன்றரை லட்சம் மதிப்பிலான பன்றிகளை வெட்டி, கறியாக சுரேஷ்குமார் விற்பனை செய்ததாகவும், பலமுறை கண்டித்தும் கேட்காததால் நண்பர்களுடன் சேர்ந்து, வெட்டியது தெரியவந்தது.
போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.