ADDED : நவ 06, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: நெற்குப்பையைச் சேர்ந்தவர் கருப்பையா 44. இவரது மகள் நடந்து சென்ற போது பக்கத்து வீட்டிற்கு உறவினராக வந்த திருமயம் ராயவரத்தைச் சேர்ந்த முத்துவீரன் 30, என்பவர் சீண்டியுள்ளார்.
கருப்பையா அவரது மகன் செல்வராஜ் ஆகியோர் முத்துவீரனிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. முத்துவீரன் ஆத்திரத்தில் அங்கிருந்து சென்றார். அச்சமடைந்த கருப்பையா குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு குன்றக்குடியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு ஆட்களை அழைத்து வந்த முத்து வீரன், செல்வராஜின் இரு கைகளிலும் கத்தியால் வெட்டினர். இதில் ஒரு கை துண்டானது.கருப்பையா புகாரின் பெயரில், குன்றக்குடி போலீசார், முத்துவீரன், செந்தில் 22, மாரிமுத்து 28, சுதாகர் 25 ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

