ADDED : செப் 28, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை தாலுகா எஸ்.ஐ., சவுந்தரராஜன் உள்ளிட்ட போலீசார் உடைகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு குமாரகுறிச்சி கமல்பாண்டி 26, செங்குளம் ஆரோக்கியடொமினிக் 19, சாத்தரசன்கோட்டை முத்துக்குமார் 19, சிவகங்கை கொட்டகுடி பாலமுருகன் 19, ஆகாஸ் 20 உள்ளிட்டோர் கையில் வாள், அரிவாள், கம்பி, முகமூடி, மிளகாய்பொடி உள்ளிட்டை வைத்துக்கொண்டு நின்றனர்.
அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் வெட்டிகுளத்தில் உள்ள கிராவல் குவாரியில் மிரட்டி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கார், டூவீலர் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.