/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாயில் கவிழ்ந்த பஸ் 53 பயணிகள் உயிர் தப்பினர் 6 பேர் காயம்
/
கண்மாயில் கவிழ்ந்த பஸ் 53 பயணிகள் உயிர் தப்பினர் 6 பேர் காயம்
கண்மாயில் கவிழ்ந்த பஸ் 53 பயணிகள் உயிர் தப்பினர் 6 பேர் காயம்
கண்மாயில் கவிழ்ந்த பஸ் 53 பயணிகள் உயிர் தப்பினர் 6 பேர் காயம்
ADDED : மே 10, 2025 07:18 AM

நாச்சியாபுரம்: திருப்புத்துார் அருகே மேலமாகாணம் அருகில் கண்மாயில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 6 பயணிகள்காயமடைந்தனர். 53 பயணிகள் தப்பினர்
நேற்று காலை 7:30 மணிக்கு திருக்கோஷ்டியூரிலிருந்து காரைக்குடிக்கு தனியார் பஸ் சென்றது. மேலமாகாணம் அருகில் செல்லும்போது ரோட்டின் குறுக்கே மாடு வந்துள்ளது.
பஸ்சை திருப்பும் போது, கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த கண்மாய் சரிவில் இறங்கி அருகிலிருந்த தாமரைக் கண்மாயில் கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த 6 பயணிகள் காயமடைந்தனர்.
மேலும் பஸ்சில் பயணம் செய்த 53 பயணிகளும் பஸ் கண்ணாடியை உடைத்து வெளியேறினர். பின்னர் கிரேன் மூலம் பஸ் கண்மாயிலிருந்து மீட்கப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. நாச்சியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.