sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பேரூராட்சியாக தரம் உயரும் 6 ஊராட்சி இளையான்குடிக்கு நகராட்சி அந்தஸ்து 

/

பேரூராட்சியாக தரம் உயரும் 6 ஊராட்சி இளையான்குடிக்கு நகராட்சி அந்தஸ்து 

பேரூராட்சியாக தரம் உயரும் 6 ஊராட்சி இளையான்குடிக்கு நகராட்சி அந்தஸ்து 

பேரூராட்சியாக தரம் உயரும் 6 ஊராட்சி இளையான்குடிக்கு நகராட்சி அந்தஸ்து 


ADDED : டிச 19, 2024 04:45 AM

Google News

ADDED : டிச 19, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி உட்பட 6 ஊராட்சிகளை பேரூராட்சியாகவும், இளையான்குடி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் ஆன்மிக சுற்றுலா தலமாக காளையார்கோவில், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, பிரான்மலை, தொல்லியல் சுற்றுலா தலமாக கீழடி, மதகுபட்டி ஆகிய 6 ஊராட்சிகள் செயல்படுகின்றன. இந்த ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

பேரூராட்சியாக தரம் உயர்த்த குறிப்பிட்ட அளவு மக்கள் தொகை,ஆண்டு வருமானம் இருக்க வேண்டும். அரசு நிர்ணயித்த மக்கள் தொகை, வருவாயை விட கூடுதலாகவே இருப்பதால், இந்த 6 ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்தலாம் என அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கருத்துரு அனுப்பியுள்ளனர். அதே போன்று பல ஆண்டாக இளையான்குடி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த மக்கள் தொகை 20 ஆயிரத்திற்கு மேல் இருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.50 லட்சத்திற்கு மேல் இருப்பது அவசியம். இளையான்குடியை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. எனவே இந்த பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தவும் கருத்துரு அனுப்பியுள்ளனர்.

பேரூராட்சிகளின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆன்மிக சுற்றுலா தலம், தொல்லியல் தலமாக இருப்பதால் 6 கிராம ஊராட்சிகளையும் பேரூராட்சியாகவும், இளையான்குடியை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பினை அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். இதற்கான கருத்துருக்களை ஏற்கனவே அனுப்பிவிட்டோம். நேற்று அரசு செயலர் நடத்திய வீடியோ கான்பிரன்சிங் கூட்டத்திலும், இது குறித்து வலியுறுத்தியுள்ளோம், என்றார்.






      Dinamalar
      Follow us