ADDED : பிப் 02, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மீனாட்சி புரத்தில் தை திருநாளை முன்னிட்டு கோயில் காளை நினைவாக வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 18 காளைகள் பங்கேற்றன. அணிக்கு 9 மாடு பிடிவீரர்கள் வீதம் 18 அணிகள் பங்கேற்றன.
ஒவ்வொரு காளையை அடக்க 20 நிமிடம் ஒதுக்கப்பட்டது. திடலில் நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 7 பேர் காயம் அடைந்தனர். சிறப்பாக விளையாடிய காளைகளுக்கும் காளையை அடக்கிய அணியினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.