sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

யானை மண்டபத்தில் திடீர் தீ விபத்து; குன்றக்குடி கோயில் யானை சுப்புலட்சுமிக்கு தீக்காயம்

/

யானை மண்டபத்தில் திடீர் தீ விபத்து; குன்றக்குடி கோயில் யானை சுப்புலட்சுமிக்கு தீக்காயம்

யானை மண்டபத்தில் திடீர் தீ விபத்து; குன்றக்குடி கோயில் யானை சுப்புலட்சுமிக்கு தீக்காயம்

யானை மண்டபத்தில் திடீர் தீ விபத்து; குன்றக்குடி கோயில் யானை சுப்புலட்சுமிக்கு தீக்காயம்


ADDED : செப் 12, 2024 12:22 PM

Google News

ADDED : செப் 12, 2024 12:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் யானை மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, யானை சுப்புலட்சுமிக்கு தீக்காயம் ஏற்பட்டது.

குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சுப்புலட்சுமி என்ற யானை உள்ளது. கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டின் அருகிலேயே யானை மண்டபம் உள்ளது. யானை மண்டபத்தில் மேற்கூரையான தகர சீட்டில், வெயிலின் தாக்கம் ஏற்படாதவாறு கீற்று கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு மின் கசிவு காரணமாக, கீற்று கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது.

தீயில் இருந்து தப்பிக்க, சுப்புலட்சுமி யானை தாமாகவே மண்டபத்திலிருந்து வெளியேறி வந்தது. கோயில் மண்டபத்தில் முன்பு தீக்காயத்துடன் யானை நிற்பதை பார்த்த, மக்கள் மற்றும் பணியாளர்கள் கோயில் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த, போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த கால்நடை மருத்துவர்கள், யானை சுப்புலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுப்புலட்சுமி யானைக்கு தீக்காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பக்தர்களும் கிராம மக்களும் சோகத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us