/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை கோயிலில் ஜூலை 28ல் ஆடித்தபசு விழா
/
மானாமதுரை கோயிலில் ஜூலை 28ல் ஆடித்தபசு விழா
ADDED : ஜூலை 22, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு விழா வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் திருவிழா வரும் 28ம் தேதி காலை 9:35 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழா நாட்களின் போது சுவாமி பல்வேறு வாகனங்களில் மண்டகபடிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.
முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு ஆக. 6ம் தேதி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானீகர் சோமசுந்தர பட்டர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.