sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு முகாம் 

/

தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு முகாம் 

தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு முகாம் 

தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு முகாம் 


ADDED : ஜூன் 17, 2025 05:18 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: அனைத்து தபால் நிலையங்களிலும் ஜூன் 30 வரை விபத்து காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என சிவகங்கை கோட்ட தபால் கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

தபால் துறையின் கீழ் இயங்கும் இந்திய போஸ்ட் பேமண்ட் வங்கி, பொது காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு ரூ.500 முதல் 700 வரை குறைவான பிரீமியத்தில் ரூ.10 மற்றும் 15 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது.

இதில் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி, தொலைபேசி மூலம் கணக்கில்லா மருத்துவ ஆலோசனை பெறலாம். விபத்தினால் மரணம், நிரந்தர முழு ஊனம், பகுதி ஊனம் ஏற்பட்டவர்களின் குழந்தைகளின் கல்வி, திருமணம் செலவினங்களுக்கு காப்பீடு நிதி, விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படியாக நாள் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் 15 நாட்களுக்கு வழங்கப்படும்.

மேலும் சூப்பர் டாப் அப் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் ரூ.2 ஆயிரம்பிரீமியம் கட்டி ரூ.15 லட்சத்திற்கான கூடுதல் மருத்துவ காப்பீட்டை பெறலாம். இதற்கான சிறப்பு முகாம் ஜூன் 30 வரை அனைத்து தபால் அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது என்றார்.






      Dinamalar
      Follow us