sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 தடுப்பு கம்பிகளால் இரவில் விபத்துக்கள் அதிகரிப்பு

/

 தடுப்பு கம்பிகளால் இரவில் விபத்துக்கள் அதிகரிப்பு

 தடுப்பு கம்பிகளால் இரவில் விபத்துக்கள் அதிகரிப்பு

 தடுப்பு கம்பிகளால் இரவில் விபத்துக்கள் அதிகரிப்பு


ADDED : ஜன 02, 2026 05:27 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: போக்குவரத்து மிகுந்த சாலைகளில் போதிய எச்சரிக்கை இல்லாமல் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதால் தினசரி விபத்துக்கள் நடந்து வருகின்றன.

மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது. தினசரி ஏராளமான வாகனங்கள் இப்பாதையை கடந்து சென்று வருகின்றன. கீழடி, சக்குடி, திருப்புவனம்,பிரமனுார்,முதுவந்திடல், திருப்பாசேத்தி உள்ளிட்ட இடங்களில் கிராம சாலைகள் குறுக்கிடுகின்றன.

இங்கிருந்து திடீரென வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்துக்கள் நேரிடுகின்றன. இதனை தவிர்க்க முக்கிய சந்திப்புகளில் போலீசார் தடுப்புகள் வைத்துள்ளனர். அந்த இடங்களில் வேகத்தை குறைத்து வாகனங்களில் செல்கின்றனர். இரவில் தடுப்புகள் இருப்பது தெரிவதில்லை. எந்த விதமான எச்சரிக்கை பலகையும் இருப்பதில்லை.

தொலை துாரங்களில் இருந்து வருபவர்களுக்கு பேரி கார்டு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். பேரி கார்டுக்கு முன்னதாக எச்சரிக்கை பலகைகளை அமைக்க வலியுறுத்தி பலமுறை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் வலியுறுத்தியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை.






      Dinamalar
      Follow us