நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கோமாளிபட்டியில் மாணவர் சேர்க்கை விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் பாலாமணி தலைமை வகித்தார்.
சக்கந்தி ஊராட்சி தலைவர் கோமதி மணிமுத்து, ஆசிரிய பயிற்றுநர் தனலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சுசீலா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் வேல்முருகன் வரவேற்றார்.
பொறுப்பு தலைமை ஆசிரியர் ராமன் பேசினார். 20 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர். அவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் பாலாமணி பரிசு வழங்கினார்.
ஆசிரியர்கள் மகாலட்சுமி, பாலமுருகன் ஏற்பாடுகளை செய்தனர்.

