sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாற்று வழியில் சுப்பன் கால்வாய் செயல்படுத்த ஆலோசனை

/

மாற்று வழியில் சுப்பன் கால்வாய் செயல்படுத்த ஆலோசனை

மாற்று வழியில் சுப்பன் கால்வாய் செயல்படுத்த ஆலோசனை

மாற்று வழியில் சுப்பன் கால்வாய் செயல்படுத்த ஆலோசனை


ADDED : ஆக 14, 2025 02:37 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரையில் இருந்து இளையான்குடிக்கு செல்லும் சுப்பன் கால்வாய் திட்டத்தை மாற்று வழியில் கொண்டு செல்வதற்காக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

மானாமதுரை அருகே செல்லும் உப்பாற்றில் பல்வேறு பகுதிகளிலிருந்து மழைக்காலங்களில் சேரும் மழைநீர் வைகை ஆற்றில் கலந்து வீணாக கடலில் கலக்கிறது. இதனை மானாமதுரை மற்றும் இளையான்குடி பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு கொண்டு செல்லும் வகையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு இளையான்குடி வரை கால்வாய் வெட்டப்பட்டது.

இத்திட்டம் முழுமை பெறாமல் முடங்கி உள்ள நிலையில் கால்வாய்கள் ஆற்றை விட மேடாக இருப்பதாலும், கால்வாயில் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளதாலும், கழிவு நீர் செல்வதாலும் இக்கால்வாயை துார்வாரி புதுப்பிக்க வேண்டுமென்று மானாமதுரை, இளையான்குடி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை நீர்வளம் சார்பில் சுப்பன் கால்வாய் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்ட நிலையில் மானாமதுரையில் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை நீர்வள செயற்பொறியாளர் ரமேஷ்,உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் அழகுராஜா மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.






      Dinamalar
      Follow us