ADDED : செப் 30, 2025 04:10 AM
சிவகங்கை: மாவட்டத்தில் பனை மரங்கள் வெட்டுவதை தடுக்கவும், பனை சாகுபடியை ஊக்குவிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குனர் சத்தியா, உதவி இயக்குனர் தர்மர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்: இக்கூட்டத்தில் மாநில மரமான பனை மரத்தினை வேரோடு வெட்டி விற்பனை செய்வதையும், செங்கல் சூளைக்கு பயன்படுத்தும் செயலை தடுக்கவும், தவிர்க்க முடியாத சூழலில் பனை மரத்தினை வெட்ட கலெக்டரிடம் நேரடியாக அனுமதி பெற வேண்டும்.
இதற்காக கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு தலைவராக கோட்டாட்சியர்கள், ஒருங்கிணைப்பு அலுவலராக கலெக்டர் பி.ஏ.,( வேளாண்மை) செயல் உறுப்பினர் தோட்டக்கலை துணை இயக்குனர், உறுப்பினர் வேளாண்மை இணை இயக்குனர், கதர் மற்றும் கிராம தொழில் வாரிய அலுவலர்கள் ஆகியோரை கண்காணிப்பு குழுவிற்காக நியமித்துஉள்ளனர்.
வட்டார அளவில் கண்காணிப்பு தலைவராக தோட்டக்கலை உதவி இயக்குனர், செயல் உறுப்பினர் வேளாண்மை உதவி இயக்குனர், ஒருங்கிணைப்பு அலுவலர் தோட்டக்கலை அலுவலர், உறுப்பினர் தாசில்தார் ஆகியோரை நியமித்துள்ளனர்.
பனை சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு தனியார், அரசு நிலங்களில் உள்ள பனை மரங்களின் எண்ணிக்கையை விடுதலின்றி அடங்கலில் ஏற்ற வேண்டும் என தீர்மானித்தனர்.